Tuesday, August 18, 2015

ஆறாக் கொடிய பசி தாகமடங்க

ஆறாக் கொடிய பசிதாக
மடங்கத் தணிய வருளளிக்கும்
மாறக் கருணை வரதன்பால்
வந்தேன் கபாடந் திறமினோ.

ஆறாக் கொடிய பசி தாகம் அடங்கத் தணிய = ஆறுதல் படுத்தமுடியாத கொடுமையான பசியும், தாகமும் அடங்கி குறைய;

அருள் அளிக்கும் = இறைவன் அருளை வழங்கும்;

மாறாக் கருணை வரதன் பால் வந்தேன் = மாறாத கருணை உடைய இறைவனை நாடி வந்திருக்கிறேன்;

கபாடம் திறமின் = உன் அன்புக் கதவைத் திறப்பாயாக கடவுளே!

No comments:

Post a Comment