Saturday, August 29, 2015

திருக்கருவூர் திருவாநிலை


திருக்கருவூர் திருவாநிலை

பிரம்மா சிருஷ்டி வேலையைச் செய்யாமல் இருந்துபோது, காமதேனு என்னும் பசு, சிவனை வழிபட்டு அந்த சிருஷ்டி அதிகாரத்தை எடுத்துக் கொண்டு சிருஷ்டி என்னும் மானிடப் பிறப்பை பெருகச் செய்தது. ஆ என்னும் பசுவான இந்த காமதேனு இந்தச் சிருஷ்டி வேலையைச் செய்ததால் இது திருஆநிலை = திருவாநிலை என்று பெயர் பெற்றதாம்.

இது கொங்கு நாட்டிலுள்ள சிவஸ்தலம். கரூர் என்றும் பெயர். 

இங்குள்ள சிவனின் பெயர் "பசுபதீஸ்வரர்". அம்மையின் பெயர் "கிருபாநாயகி". 

கருவூர்தேவர் இங்குதான் இருந்தார். அவர் சிவயோகமும் அணிமா சித்திகளும் நிரம்ப பெற்றவர். அவர், நினைத்தால், மழைபொழியும், வெயில் நீங்கும். இதுபோன்ற பல அற்புதங்களை செய்தவர் இந்த கருவூர்த் தேவர்.

No comments:

Post a Comment