Wednesday, August 12, 2015

நாரி தீர்த்தங்கள்

நாரி தீர்த்தங்கள்;
தென்இந்தியாவில் இந்த நாரி தீர்த்தங்கள் உள்ளனவாம்.
இந்த ஐந்து தீர்த்தங்களின் பெயர்களும் --
1. சௌபத்திரம்,
2. பௌலோமம்,
3. காரண்டவம்,
4. பிரசன்னம்,
5. பாரத்துவாஜம்.

இந்த ஐந்து தீர்த்தங்களிலும் ஐந்து அப்சர பெண்கள் உள்ளனராம். அவர்கள் --
1.நந்தை,
2. சௌரபேயி,
3. சமீசி,
4. வசை,
5. லதை.

ஒரு ரிஷி தனக்கு ஏற்பட்ட சாபத்தினால் முதலையாக ஆனார். அந்த முதலையானது இந்த தீர்த்தங்களில்தான் இருந்ததாம். அது இந்த தீர்த்தங்களில் நீராட வருபவர்களை பிடித்துக் கொள்ளமாம். 

இப்படி இருந்தபோது, பாண்டவர்களில் ஒருவனான அர்சுனன் தென் இந்தியாவில் அதாவது தமிழகத்தில் குறிப்பாக பாண்டிய மன்னனின் நாட்டில் தீர்த்த யாத்திரை வந்ததாகவும், அப்போது இந்த தீர்த்தங்களில் நீராடியபோது, அந்த முதலையானது அர்ச்சுனனை காலைப் பிடித்துக் கொண்டதாகவும், அப்போதே அந்த முதலை ரிஷியின் சாபம் நீங்கி, மறுபடியும் ரிஷியாக மாறிவிட்டாராம். 

இந்தத்  தீர்த்தங்கள் எல்லாம் தமிழகத்தில் தற்போது எங்கே உள்ளனவோ தெரியவில்லை.

No comments:

Post a Comment