Saturday, August 29, 2015

திருப்பனந்தாள்

திருப்பனந்தாள்:

காவிரியின் வடகரையில் உள்ள சிவஸ்தலம் இந்த திருப்பனந்தாள்.

இதற்கு ஒரு கதை உண்டு.

ஒரு சிவபக்தை, தான் தொடுத்த மாலையை சிவனுக்கு அணிவிக்க வருகிறாள். அவள் அந்த மாலையை சிவனின் கழுத்தில் போட முயற்சிக்கும்போது, அவளின் ஆடை நழுவுகிறது. இரண்டு கைகளும் மாலையைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. மாலையை கீழே விழுக விடமுடியாது. ஆனாலும் அவளின் ஆடை நழுவுகிறது. அதை பிடிக்க வேறு கைகள் இல்லை. 

தன் முழங்கைகளைக் கொண்டு ஆடையை இறுக்கிக் கொண்டே, அந்த மாலையை இறைவனுக்கு சாத்த முயற்சிக்கிறாள். அவளால் கைகளை தூக்கி மாலையை இறைவனின் கழுத்தில் போட முடியவில்லை. 

இந்த இம்சையைப் பார்த்த சிவன், தன் கழுத்தை குனிந்து அவள் கைகள் இருக்கும் இடம் வரை குனிந்து அந்த மாலையை ஏற்றுக் கொண்டானாம். 
 

No comments:

Post a Comment