அத்வைதம்:
அ+துவைதம் = இரண்டற்ற நிலை; இறைவன் பரமாத்மா; ஜீவன்கள்
(உயிர்கள்) ஜீவாத்மா; 3 அல்லது 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த
ஆதிசங்கரர் இந்த தத்துவத்தை வெளிப்படுத்தினார்;
மற்ற தத்துவங்கள்:
அத்வைதம் தவிர மற்ற தத்துவங்கள்: மகாவீரின் சமணம், புத்தரின் பௌத்தம்,
மத்வரின் துவைதம், இராமானுஜரின்
விசிஷ்டாத்வைதம், முதலியன;
ஆத்மா:
ஆத்மான் என்றால் மூச்சு என்று பொருளாம்; நான் என்ற
கேள்விக்குப் பதிலாக இது இருக்கிறது; இது உடல் அல்ல, மனது அல்ல, புத்தி அல்ல, உயிரோடு
கலந்து இருக்கும் உயிர்த்தத்துவம்தான் இந்த ஆன்மா; நான் என்ற
அகந்தை ஒழிந்தபின் , எது நம்மில் மிஞ்சி நிற்கிறதோ அதுவே
ஆன்மா; "தத் த்வம் அஸி" நான் அதாகவே இருக்கிறேன்
என்பது பொருளாம்; நான் ஆன்மாவை அறிந்து கொண்டேன் என்று
சொல்லக் கூடாதாம்; சொல்ல முடியாதாம்; அதையே
அதற்கு அறிமுகப்படுத்த முடியாதாம்; மிஞ்சி இருப்பதே ஒரு
பொருள்தானாம்; இருபொருள் கிடையாதாம்; எனவே
ஆன்மாவை நமக்கே அறிமுகப்படுத்திக் கொள்ள முடியாது; அதனால்தான்
தத் துவம் அஸி என்னும் அது நீயாக இருக்கிறாய் என்று கூறுகின்றனர் தத்துவஞானிகள்;
பிரம்மம்:
பிரம்மம் என்றால் உண்மையான என்று பொருளாம்; பிரம்மமே உண்மை;
மற்றதெல்லாம் அவற்றின் நிழல்கள்; பிரம்மம்
என்ற சொல்லை வடமொழியில் "ப்ரஹ்மம்" என்று உச்சரிக்கின்றனர்; இதையேதான் சத் (ஸத்=உண்மை) என்றும், பரபிரம்மம்
என்றும் சொல்கின்றனர்;
ஆதிசங்கரிரின் அத்வைதமும், விசிஷ்டாத்வைதமும்:
ஆன்மா என்னும் உணர்வு எல்லா உயிர்களிலிலும் உள்ளது; பரபிரம்மம் என்னும்
எங்கும் நிறைந்த இறைநிலையும் ஒன்றே தான் என்று ஆதிசங்கரர் கூறுகிறார்; இதுவே அத்வைத வேதாந்தம்; குடத்துக்குள் இருக்கும்
வெட்ட வெளிக்கும், குடமே இல்லாத வெட்ட வெளிக்கும்
வித்தியாசம் இல்லை; அதுபோலவே ஜீவ ஆத்மாவும், பரம ஆத்மாவும் என்கிறார்; ஆனால் ஜீவ ஆத்மாவும்,
பரம ஆத்மாவும் ஒரே மாதிரி இருந்தாலும், இரண்டும்
குணத்தில் வேறுபாடு கொண்டது;இது இராமானுஜரின் விசிஷ்டாத்வைத
வேதாந்தம்;
உபநிடதங்கள் (உபநிஷத்):
இதை தத்துவ இலக்கியம் என்பர்; வேதங்கள் முதலில்
தோன்றின; அதற்கு விளக்கமாக உபநிடதங்கள் வந்ததால், அதாவது வேதத்துக்கு அந்தமாக, முடிவாக, கடையாக வந்ததால், வேதாந்தம் என்றும் சொல்வர்;
உதாரணமாக, கைவல்ய உபநிடதம் என்பது ஒரு
உபநிடதம்; இராமபிரான் ஆஞ்சனேயருக்கு உபதேசித்ததாக கூறும்
உபநிஷத் ஆகும்; இப்படி 108 உபநிஷத்துக்கள் உள்ளன;
அஹம் பிரம்மாஸ்மி:
அஹம் பிரம்மாஸ்மி என்ற சமஸ்கிருத வாக்கியத்துக்கு
"நான் பரம்பொருளாக இருக்கிறேன்" என்று பொருளாம்;
**
No comments:
Post a Comment