Tuesday, March 29, 2016

அத்வைதம்

அத்வைதம்:
அ+துவைதம் = இரண்டற்ற நிலை; இறைவன் பரமாத்மா; ஜீவன்கள் (உயிர்கள்) ஜீவாத்மா; 3 அல்லது 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிசங்கரர் இந்த தத்துவத்தை வெளிப்படுத்தினார்;

மற்ற தத்துவங்கள்:
அத்வைதம் தவிர மற்ற தத்துவங்கள்: மகாவீரின் சமணம், புத்தரின் பௌத்தம், மத்வரின் துவைதம், இராமானுஜரின் விசிஷ்டாத்வைதம், முதலியன;

ஆத்மா:
ஆத்மான் என்றால் மூச்சு என்று பொருளாம்; நான் என்ற கேள்விக்குப் பதிலாக இது இருக்கிறது; இது உடல் அல்ல, மனது அல்ல, புத்தி அல்ல, உயிரோடு கலந்து இருக்கும் உயிர்த்தத்துவம்தான் இந்த ஆன்மா; நான் என்ற அகந்தை ஒழிந்தபின் , எது நம்மில் மிஞ்சி நிற்கிறதோ அதுவே ஆன்மா; "தத் த்வம் அஸி" நான் அதாகவே இருக்கிறேன் என்பது பொருளாம்; நான் ஆன்மாவை அறிந்து கொண்டேன் என்று சொல்லக் கூடாதாம்; சொல்ல முடியாதாம்; அதையே அதற்கு அறிமுகப்படுத்த முடியாதாம்; மிஞ்சி இருப்பதே ஒரு பொருள்தானாம்; இருபொருள் கிடையாதாம்; எனவே ஆன்மாவை நமக்கே அறிமுகப்படுத்திக் கொள்ள முடியாது; அதனால்தான் தத் துவம் அஸி என்னும் அது நீயாக இருக்கிறாய் என்று கூறுகின்றனர் தத்துவஞானிகள்;

பிரம்மம்:
பிரம்மம் என்றால் உண்மையான என்று பொருளாம்; பிரம்மமே உண்மை; மற்றதெல்லாம் அவற்றின் நிழல்கள்; பிரம்மம் என்ற சொல்லை வடமொழியில் "ப்ரஹ்மம்" என்று உச்சரிக்கின்றனர்; இதையேதான் சத் (ஸத்=உண்மை) என்றும், பரபிரம்மம் என்றும் சொல்கின்றனர்;

ஆதிசங்கரிரின் அத்வைதமும், விசிஷ்டாத்வைதமும்:
ஆன்மா என்னும் உணர்வு எல்லா உயிர்களிலிலும் உள்ளது; பரபிரம்மம் என்னும் எங்கும் நிறைந்த இறைநிலையும் ஒன்றே தான் என்று ஆதிசங்கரர் கூறுகிறார்; இதுவே அத்வைத வேதாந்தம்; குடத்துக்குள் இருக்கும் வெட்ட வெளிக்கும், குடமே இல்லாத வெட்ட வெளிக்கும் வித்தியாசம் இல்லை; அதுபோலவே ஜீவ ஆத்மாவும், பரம ஆத்மாவும் என்கிறார்; ஆனால் ஜீவ ஆத்மாவும், பரம ஆத்மாவும் ஒரே மாதிரி இருந்தாலும், இரண்டும் குணத்தில் வேறுபாடு கொண்டது;இது இராமானுஜரின் விசிஷ்டாத்வைத வேதாந்தம்;

உபநிடதங்கள் (உபநிஷத்):
இதை தத்துவ இலக்கியம் என்பர்; வேதங்கள் முதலில் தோன்றின; அதற்கு விளக்கமாக உபநிடதங்கள் வந்ததால், அதாவது வேதத்துக்கு அந்தமாக, முடிவாக, கடையாக வந்ததால், வேதாந்தம் என்றும் சொல்வர்; உதாரணமாக, கைவல்ய உபநிடதம் என்பது ஒரு உபநிடதம்; இராமபிரான் ஆஞ்சனேயருக்கு உபதேசித்ததாக கூறும் உபநிஷத் ஆகும்; இப்படி 108 உபநிஷத்துக்கள் உள்ளன;

அஹம் பிரம்மாஸ்மி:


அஹம் பிரம்மாஸ்மி என்ற சமஸ்கிருத வாக்கியத்துக்கு "நான் பரம்பொருளாக இருக்கிறேன்" என்று பொருளாம்
**

No comments:

Post a Comment