அத்தி தல முருகன்
பிள்ளைத் தமிழ்-3
(முருகன் திருஅவதாரம்)
ஆர்த்தெழுமச் சூர்
முதலால் அலக்கணுற்ற தேவரெலாம்
அகமகி.ச் சிவன்
விழியால் ஆறுசுடர் அருள
அனலனோடு மருத்தினனும்
அவைதாங்கி ஆற்றாதே
அருங்கங்கை இடம்
சேர்க்க அன்னாளும் மாழ்கித்
தீர்த்திகையாம்
சரவணத்தில் செலவுய்க்க அவைகலெலாம்
திரண்டு ஒன்றாய்ச்
செழுமலரிற் சிறுகுழவி ஆகித்
திரள் அமுது
கார்த்திகையா இடம் உண்டு விளையாடித்
திரிகின்ற காலத்தே
நம் மகனை ஈன்றே
பார்த்தருள வேண்டும
எனப் பரமனுடன் வந்தவளே
பால்சுரக்க
அனைத்தவனைச் சிரமோந்த தாயே
பரல்களுறு நலவீரர்
தோன்றுதற்குத் துணையாகிப்
பல்லுயிரும்
கருவுயிர்த்த பைங்கொடியே காக்க
சீர்த்தமிகு பெருமக்கள்
வளர் கைதை நகரத்தில்
திகழ்கின்ற அத்தி
தலத் திருக்கோயிலேற்றுச்
செழுஞ்சுடரோன்
உதயகிரி வரும் பரிசாய் மயிலின்மேல்
இவர்ந்து வரும்
ஆறுமுக விளையனை அம்மா.
**
No comments:
Post a Comment