Sunday, March 13, 2016

கந்தரனுபூதி-45


கந்தரனுபூதி-45

கரவாகிய கல்வியுளார் கடை சென்று
இரவா வகை மெய்ப் பொருள் ஈகுவையோ
குரவா குமரா குலிசாயுத குஞ்
சரவா சிவயோக தயாபரனே.

(கற்ற கலவியாளர்கள், தான் கற்ற கல்வியைப் பிறர் பயன்பெற செய்யாமல் தானே வைத்துக் கொண்டிருக்கும் கல்வியாளர்களிடம் சென்று மெய்ப் பொருள் உண்மையைக் கேட்கும்படி வைக்காமல், நீயே மெய்ப்பொருளை ஈந்து அருள்புரிந்துள்ளாய்!  குரவா! குமரா! குலிசா! (ஆயுதம் தாங்கியவனே!) குஞ்சரவா! (யானையை வைத்திருப்பவனே!), சிவயோகத்தை அருளியவனே! தயாபரனே!)

கரவா கியகல் வியுளார் கடைசென்
றிரவா வகைமெய்ப் பொருளீ குவையோ
குரவா குமரா குலிசா யுதகுஞ்
சரவா சிவயோ கதயா பரனே.
(அருணகிரிநாதர் அருளிய கந்தரனுபூதி பாடல்-45)

**

No comments:

Post a Comment