Thursday, March 17, 2016

கௌமார பர்வதம்


கௌமார பர்வதம்
இது கர்நாடக மாநிலத்தில் உள்ளது; இதன் உயரம் சுமார் ஆறாயிரம் அடி உயரம்; இதை, “புஷ்பகிரி” என்றும், “சுப்ரமண்ய மலை” என்றும் கூறுவர்; குடகு மலைப் பகுதியில் இந்த சுப்ரமண்ய மலைதான் உயரமானது; இங்குதான் கௌமாரர்கள் என்னும் முருக பக்தர்கள் வழிபாடு நடத்தும் முக்கிய இடம் உள்ளது; இங்கு வழிபாடு நடத்தினால், முக்தி கிடைக்கும் என்பது கௌமாரர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை; இங்கு இருக்கும் கோயிலுக்குப் பெயர் குக்கே சுப்ரமண்யா ஆலயம்;
வாசுகி:
இங்குதான் வாசுகி என்னும் பாம்பும், அந்தக் கூட்டங்களைச் சேர்ந்த மற்ற பாம்புகளும், அதன் எதிரியான கருடனுக்குப் பயந்துகொண்டு, இங்கு வந்து சுப்ரமணியனை அடைக்கலம் கேட்டு அங்கு வாழ்கின்றனவாம்;
குமாரபர்வதம்:
சண்முகன், “தாரகனையும், பத்மாசுரனையும்” கொன்று அழித்தபிறகு, தன் சகோதரன் கணேசனுடனும், தன் படைகளுடனும், இந்த மலையான குமார பர்வதத்துக்கு வருகிறான்; அங்கு இந்திரனும் (மாமனார்) மற்ற தேவர்களும் சண்முகனை வரவேற்று வணங்குகிறார்கள்; அப்படி வணங்கும்போது, சண்முகனை “குமாரசாமி கடவுள்” என வணங்குகிறார்கள்; *(அதனால்தான் கர்நாடகாவில் அதிகமானவர்களின் பெயர்கள் குமாரசாமியாக இருக்கிறது); அங்குதான், இந்திரன், தன் மகள் தேவசேனாவை சண்முகன் என்கிற குமாரசாமிக்கு திருமணம் செய்து கொடுக்க ஒப்புக் கொள்கிறான்; அங்கு, திருமணம் நடக்கிறதாம்; பிரம்மன், விஷ்ணு, ருத்ரன், மற்ற கடவுள்கள் எல்லோரும் வந்திருக்கிறார்கள்; அங்கு குமாரசாமிக்கு அபிஷேகம் நடக்கிறது; எல்லா நதிகளின் நீர்களும் அபிஷேகத்தில் ஊற்றுகிறார்கள்; அவை ஒடி, வழிந்த நதிக்குப் பெயர்தான் “குமாரதாரா”; அங்குதான், கருடனுக்கு பயந்து கொண்டு தவம் செய்த வாசுகி என்ற பாம்புக்கும் அபயம் காத்து வரம் தருகிறான்;
**







No comments:

Post a Comment