கந்தரனுபூதி-50
மதிகெட்டு அறவாடி
மயங்கி அறக்
கதிகெட்ட அவமே கெடவோ
கடவேன்
நதிபுத்திர ஞான சுகா
அதிபவத்
திதி புத்திரர் வீறடு
சேவகனே.
(மதி கெட்டு, உள்ளம் மயங்கி, முழுவதும்
கெட்டு, நற்கதியான முக்தியைப் பெறும் வழியை இழந்து போகும்படி
ஆகிவிடுமோ! நதியின் புத்திரனே! ஞான சுகத்தின் அதிபதியே! திதி புத்திரர்களின்
பெருமையைக் குலைத்த சேவகனே)
மதிகெட் டறவா டிமயங்
கியறக்
கதிகெட் டவமே கெடவோ
கடவே
னதிபுத் திரஞா னசுகா
திபவத்
திதிபுத் திரர்வீ
றடுசே வகனே.
(அருணகிரிநாதர்
அருளிய கந்தரனுபூதி பாடல்-50)
**
No comments:
Post a Comment