“வடிவுடை வாள் தடங்கண் உமை
அஞ்சவோர் வாரணத்தைப்
பொடியணி மேனி மூட உரி
கொண்டவன் புன்சடையான்
கொடி நெடு மாடம் ஓங்கும்
குழகன் குடமூக்கிடமா
இடிபடு வானம் ஏத்த இருந்தானவன்
எம்மிறையே!”
(அழகிய வாள் போன்ற கூரிய விழிகளை உடைய உமையான பார்வதியே அஞ்சும்படி, யானை வடிவ அரக்கனை கொன்று தன் மேனியில் போர்த்திக் கொண்டவன், உடலெல்லாம் திருநீறு அணிந்த ஜடாமுடி தரித்த சிவன்! உயர்ந்த மாடங்கள் சூழ்ந்த குடமூக்கு எனும் கும்பகோணத்தில் குடியிருக்கிறார்; இடிக்கும் வானத்தின் தேவர்கள் போற்றி வணங்கும் எமது இறைவன்!)
(ஞானசம்பந்தர் பாடிய தேவாரப்பாடல்)
**
No comments:
Post a Comment