Thursday, March 31, 2016

அகத்திய மூலம் திருமந்திரம்-38

(அடிமுடி தேடல்)

ஆம் ஏழு உலகுற நின்ற எம் மண்ணலும்
தாம் ஏழு உலகில் தழல் பிழம்பாய் நிற்கும்
வான் ஏழு உலகு உறும் மாமணி கண்டனை
நானே அறிந்தேன் அவன் ஆண்மையினாலே!

ஆமே ழுலகுற நின்றவெம் மண்ணுலந்
தாமே ழுலகிற் றழற்பிழம் பாய் நிற்கும்
வானே ழுலகுறு மாமணிக் கண்டனை
நானே யறிந்தே னவனாண்மையி னாலே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-38)

No comments:

Post a Comment