Saturday, March 12, 2016

கந்தரனுபூதி-41


கந்தரனுபூதி-41

சாகாது எனையே சரணங்களிலே
காகா நமனார் கலகம் செய்யும் நாள்
வாகா முருகா மயில் வாகனனே
யோகா சிவ ஞானோப தேசிகனே.

(நமன் என்னும் யமன் கலகம் செய்து என் உயிரை எடுக்க வரும் நாளில், என்னை  இறக்க விடாமல் என்னை, உன் பாதங்களில் சேரும்படி காப்பாற்றுவாய்! வாகா முருகனே! மயிலை வாகனமாக உடையவனே! யோகனே! சிவஞான உபதேசிகனே (சிவனுக்கு ஞானத்தை உபதேசித்தவனே!)

சாகா தெனையே சரணங் களிலே
காகா நமனார் கலகஞ் செயுநாள்
வாகா முருகா மயில்வா கனனே
யோகா சிவஞா னோபதே சிகனே.
(அருணகிரிநாதர் அருளிய கந்தரனுபூதி பாடல்-41)

**

No comments:

Post a Comment