இதோபதேசம்
(மான், நரி, காகம்)
மரமில்லா இடத்தில்
ஆமணக்கும் மரமாகும்! அதுபோல், வித்துவான் இல்லாத
இடத்தில், அற்பம் அறிந்தவனும் வித்வான் ஆகிறான்! உதார குணம் உள்ளவனுக்கு உலகம் முழுதும்
சுற்றமே! பகையும் உறவும் இயல்பிலேயே ஒருவருக்கும் இல்லை; பகையும்
உறவும் நன்மை தீமைகள் என்னும் காரணங்களால் சம்பவிக்கின்றன;
மானும், நரியும், காகமும் சேர்ந்த வாழத்
தீர்மானித்தன;
ஒருநாள், நரி, மானிடம், "நண்பனே! இங்கு பக்கத்தில் பயிர் நிறைந்த வயல் ஒன்று இருக்கிறது: வந்து
பார்க்கிறாயா? என்று கேட்டு அதைக் கூட்டிக் கொண்டுபோய்
காட்டியது; மானுக்குச் சந்தோஷம்; தினம்
தினம் அந்த பயிரை மேய்ந்து வந்தது; வயலுக்குச்
சொந்தக்காரனுக்கு கோபம்; ஒரு நாள் ஒரு வலையை விரித்து
வைத்திருந்தான்; மான் வலையில் அகப்பட்டுக் கொண்டது;
"என்னை என் நண்பன் நரி வந்து காப்பாற்றுவான்" என்று
நினைத்துக் கொண்டது; ஆனால், நரிக்கு
வேறு யோசனை வந்துவிட்டது; அதன் இறைச்சி மேல் ஒரு கண்
ஏற்பட்டது; வலையில் சிக்கிய மானிடம் சென்ற நரி,
"இன்று எனக்கு பனுவார விரதம்; எனவே நான்
என் பற்களால் வலையை தொடமாட்டனே! விடிந்ததும் நான் வந்து வலையை வெட்டி உன்னை
காப்பாற்றுகிறேன்" என்று தந்திரமாகக் கூறியது;
மானின் நண்பனான
காகத்துக்கு இந்த சம்பவம் தெரியாது; மானைக் காணவில்லையே என்று
தேடுகிறது; வலையில் மாட்டிக் கொண்ட மானிடம் வந்து "இது
என்ன கொடுமை நண்பா?" என்றது; மானோ,
"நரியின் சொல்லைக் கேட்டு, பயிரை
மேய்ந்தேன்; இந்த கொடுமைக்கு ஆளானேன்" என்றது:
"எங்கே அந்த வஞ்சக நரி?" என்று கோபமாக கேட்ட காகத்துக்கு,
"என் மாமிசத்துக்காக பக்கத்தில் மரத்துக்குப்பின் ஒளிந்து
கொண்டு பார்த்துக் கொண்டு இருக்கிறது அந்த நரி" என்று வலையில் மாட்டிக் கொண்ட
மான் வருத்தத்துடன் சொல்லியது;
"நான் ஏற்கனவே
உன்னிடம் தெளிவாகச் சொல்லி இருந்தும், அதன் பேச்சை நீ
கேட்டுவிட்டாய்: 'என்னிடம் குற்றமில்லை' என்று ஒருவனை நம்பிச் செல்லக் கூடாது; மரணத்தை
நெருங்குபவர், நண்பர் சொல்லும் இடத்தை விடமாட்டான்"
என்றது காகம்; நம் முகத்துக்கு முன்னர் நல்ல வார்த்தை
கூறிவிட்டு, பின்னால் போய் தீங்கு செய்வர்; இவர்களின் உறவை கைவிட வேண்டும்; தீயவனின் நாக்கின்
நுனியில் தேன் இருக்கும்; நெஞ்சில் நஞ்சிருக்கும்;
அங்கு வயலுக்கு
சொந்தக்காரன் வந்துவிட்டான்; காகம் ஒரு தந்திரம்
செய்தது; மானை, அது இறந்ததுபோல
நடிக்கச் சொல்லிற்று; அந்த மானின் கண்களைக் கொத்துவதுபோல,
காகம் அந்த மானின் கண்ணை கொத்தியது; அதைக்
கண்ட வயற்காரன் வந்து இறந்த மானின் மேல் கிடந்த வலையை பிரித்து எடுத்துக் கொண்டு
சென்றான்; உடனே காகம் குரல் கொடுத்தது; உடனே மான் எழுந்து ஓடி
தப்பிவிட்டது; நரியும் ஏமாந்தது;
ஒருவன் தான் செய்த
புண்ணிய பாவங்களின் பயன்களை மூன்று வருடத்திலாவது மூன்று மாதங்களிலாவது மூன்று
நாளிலாவது அனுபவிப்பான்; அதுபற்றி, உணவாக இருக்கும் பிராணிக்கும், அதனை உண்ணும்
பிராணிக்கும் இடையிலே நிகழும் நட்பானது கேட்டுக்கே காரணம்"
**
No comments:
Post a Comment