Friday, April 15, 2016

சிவன்

சிவன்

சிவன் என்றால் மங்களரூபி என்று பொருளாம்;

சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுபவர் 'சைவர்' எனப்படுவர்; இவர்களின் சமயம் 'சைவ சமயம்' என்றும் பெயர்படும்;

மொத்தமுள்ள 18 புராணங்களில் 10 புராணங்கள் சிவனைச் சார்ந்து உள்ளன;

உருவம் இல்லாமல் (அருவமாய்) இருக்கும் திருமேனிக்கு "சிவன்" என்று பெயர்;

உருவமாயும் அருவமாயும் (இரண்டு நிலைசேர்ந்து) இருக்கும் திருமேனிக்கு "சதாசிவன்" என்று பெயர்;
உருவமாய் இருக்கும் திருமேனிக்கு "மகேஸ்வரன்" என்று பெயர்;

பிரம்மனை சிருஷ்டி கர்த்தா என்பர்;
விஷ்ணுவை காவற் கர்த்தா என்பர்;
சிவனைச் சங்கார கர்த்தா என்பர்;

சங்கார கிருத்தியத்துக்குள்ளே சிருஷ்டியும், காவலும் இருப்பதால், சிவனே முழுமுதற் கடவுளாக ஏற்கப்படுகிறார்;

இவருக்கு வேறு பெயர்களும் (காரணப்பெயர்கள்) உண்டு;

விருஷபத்துவஜன்
உமாபதி
சர்மவாசன்
நந்நிவாகனன்
சூலி
கபாலமாலாதரன்
சர்ப்ப குண்டலன்
காலகாலன்
நீலகண்டன்
காங்காதரன்
திரிநேத்திரன்
சந்திரசேகரன்
திரிபுராந்தகன்

சிவனை, மகாலிங்கம், அர்த்தநாரீஸ்வரர், நடேசர் முதலிய இருபத்தைந்து மூர்த்திகளாக தியானித்து வழிபடுவர்; சிவனுக்கு சக்தி உமாதேவி என்பர்;
25 மூர்த்திகள்:
லிங்கமூர்த்தி
சுகாசன மூர்த்தி
உமாசக மூர்த்தி
கல்யாண சுந்தர மூர்த்தி
அர்த்த நாரீசுவர மூர்த்தி
சோமஸ்கந்த மூர்த்தி
சக்கரப் பிரதான மூர்த்தி
திரிமூர்த்தி
அர்தாங்க விஷ்ணுமூர்த்தி
தட்சிணா மூர்த்தி
பிட்சாடன மூர்த்தி
கங்காள மூர்த்தி
காம சம்கார மூர்த்தி
காலாரி
ஜலந்தாரி
திரிபுரசம்கார மூர்த்தி
சரப மூர்த்தி
நீலகண்ட மூர்த்தி
திரிபாத மூர்த்தி
ஏகபாத மூர்த்தி
வைரவமூர்த்தி
விருஷபாருட மூர்த்தி
சந்திரசேகர மூர்த்தி
நடராஜ மூர்த்தி
கங்காதர மூர்த்தி
**



No comments:

Post a Comment