Monday, March 7, 2016

குமாரசுவாமி (குமாரக் கடவுள்)


குமாரசுவாமி (குமரக்கடவுள்)

சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து வீழ்ந்த அக்கினிப் பொறிகளை, அக்கினி பகவான் ஏற்றுக் கொண்டு, அதை எடுத்துப் போய், சரவணப் பொய்கை என்னும் குளத்தில் விட்டார்; அந்த அக்கினிப் பொறிகள் ஆறும், ஆறு குழந்தைகளாக உருமாறின. அவற்றை ஆறு கார்த்திகை நட்சத்திரப் பெண்கள் பாலுட்டி வளர்த்தனர்; இதைப் பார்த்த உமாதேவி, அந்த குழந்தைகளை ஆறையும் ஒருசேர எடுத்து தழுவினார்; அந்த ஆறு குழந்தைகளும் ஒரே குழந்தையாக மாறி விட்டன; ஆனாலும், அவை ஆறு முகங்களுடன், பன்னிரண்டு தோள்களுடன், இரு பாதங்களுடன் ஆறுமுகப் பெருமான் ஆனார்;

இவரே தேவர்களுக்கு தலைவன்;
இவரின் வாகனம் மயில்;
இவரின் ஆயுதம் வேல்;
இவரின் இரு மனைவிகள் வள்ளியும், தெய்வானையும்.
இவர் சூரபர்மனை எதிர்த்து போரிட்டு அழித்தார்;


No comments:

Post a Comment