Monday, March 7, 2016

கந்தரனுபூதி-2


அருணகிரிநாதர் அருளிய "கந்தரனுபூதி" பாடல்-2

உல்லாச நிராகுல யோக விதச்
சல்லாப விநோதனும் நீ அலையோ
எல்லாம் அற என்னை இழந்த நலம்
சொல்லாய் முருகா சுர பூபதியே.

(உள்ளம் களிப்பிலும், கலக்கமில்லாமலும், யோகங்கள் பல செய்தும், சல்லாபத்திலும், விநோத மகிழ்ச்சியிலும் கலந்து நீ மகிழ்ச்சி தருவாய்! எல்லா பந்தங்களும் விட்டொழித்து, என்னையே இழந்த எனக்கு, நல்ல சொல்லுடன் உபதேசம் அருளாய் முருகா!)

(கந்தரனுபூதி-2)
**

No comments:

Post a Comment