அருணகிரிநாதரின்
"கந்தரனுபூதி" பாடல்-1
ஆடும் பரிவேல் அணி
சேவல் எனப்
பாடும் பணியே பணியாய்
அருள்வாய்
தேடும் கய மாமுகனைச்
செருவில்
சாடும் தனியானை
சகோதரனே.
(ஆடும் பரி என்னும்
குதிரை போன்ற மயில், வேல், அணி சேவல் என பாடுவதே என் பணியாக இருக்கும்படி அருள் புரிவாய் கந்தா!
கயமுகன் என்னும் அசுரன், தேவர்களை தேடித் திரிந்தபோது,
போரில் அவனைக் கொன்ற விநாயகனின் சகோதரனே!)
**
No comments:
Post a Comment