கந்தரனுபூதி-6
திணியான மனோ சிலைமீது உனது தாள்
அணியார் அரவிந்தம் அரும்புமதோ
பணியாவென வள்ளி பதம் பணியும்
தணியா அதிமோக தயாபரனே.
திணி என்னும் திண்மையான என் மனத்தின் உள்ளே
உன் திருப்பாதங்கள் இருக்கும் அரவிந்தம் என்னும் தாமரை மலர்கள் மலருமோ? பணிகள்
என்ன என்ன உண்டு என்று கூறுவாய், வள்ளியின் பாதங்களில் தணியாத காதல் கொண்டவரே,
அதிக மோகம் கொண்ட தயாபரனே!
(அருணகிரிநாதர் அருளிய கந்தரனுபூதி
பாடல்-6)
**
No comments:
Post a Comment