Friday, March 4, 2016

கந்தரலங்காரம்-66

கந்தரலங்காரம்-66

நீர்க் குமிழிக்கு நிகர் என்பர் யாக்கை நில்லாது செல்வம்
பார்க்கும் இடத்து அந்த மின் போலும் என்பர் பசித்து வந்தே
ஏற்கும் அவர்க்கிட என்னின் எங்கேனும் எழுந்திருப்பார்
வேல் குமரற்கு அன்பில்லாதவர் ஞானம் மிகவும் நன்றே.

(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-66)
"நீர்க் குமிழிக்கு நிகரானது என்பார்கள் இந்த உடம்பை! நாம் வைத்திருக்கும் செல்வம் நிற்காது; இன்னும் பார்த்துச் சொன்னால், அந்த செல்வமானது மின்னலைப் போல வேகத்தில் நிற்காமல் செல்லும் தன்மையது; பசித்து வந்து யாசித்து நிற்பவருக்கு உணவளிக்காமல் எங்கேயாவது எழுந்து போய் விடுவர்; வேலாயுதத்தை உடைய குமரனுக்கு, இந்த அன்பில்லாதவரின் ஞானம் மிகவும் நன்றே!"

நீர்க்குமிழிக்கு நிகரென்பர் யாக்கை நில்லாது செல்வம்
பார்க்குமிடத்தந்தமின் போலுமென்பர் பசித்துவந்தே
யேற்குமவர்க்கிட வென்னினெங்கேனு மெழுந்திருப்பார்
வேற்குமரற் கன்பில்லாதவர் ஞான மிகவுநன்றே.
(கந்தரலங்காரம்-66)


No comments:

Post a Comment