கந்தரலங்காரம்-81
தாரா கணம் எனும்
தாய்மார் அறுவர் தரும் முலைப்பால்
ஆராது உமை முலைப்
பாலுண்ட பாலன் அரையில் கட்டும்
சீராவும் கையில்
சிறுவாளும் வேலும் என் சிந்தையவே
வாராது அகல் அந்தகா
வந்தபோது உயிர் வாங்குவனே.
(அருணகிரிநாதர்
அருளிய கந்தரலங்காரம் பாடல்-81)
"தாரா என்னும்
கார்த்திகை நட்சத்திரங்களான தாய்மார்கள் ஆறுபேர் தரும் முலைப்பால் போதாமல் உன்
தாயான உமாதேவியின் முலைப் பாலும் உண்ட பாலகா! உன் இடுப்பில் கட்டும் சீரா என்னும்
உடைவாளும், உன் கையில் வைத்திருக்கும்
வேலும், என் சிந்தையில் எப்போது இருக்கிறது; எனவே, அந்தகா என்னும் எமனே என்னிடம் வராதே, அகன்று சென்றுவிடு! மீறி வந்தால், உன் உயிரை
வாங்குவேன்!"
தாராகணமெனுந்
தாய்மாரறுவர் தருமுலைப்பா
லாராதுமை
முலைப்பாலுண்ட பாலனரையிற் கட்டுஞ்
சீராவுங்
கையிற்சிறுவாளும் வேலுமென் சிந்தையவே
வாரா தகலந்த
காவந்தபோதுயிர் வாங்குவனே.
(கந்தரலங்காரம்-81)
No comments:
Post a Comment